இந்த தாத்தாக்கு பேரன் மீது பாசத்தைப் பாருங்க… சிலிர்த்திடுவீங்க…எவ்ளோ பேருக்கு கிடைக்கும் இந்த சந்தோஷம்?

தந்தை எப்படி ஒவ்வொருவருக்கும் முதல் ஹீரோவோ, அதேபோலத்தான் தாத்தா, ஆச்சியும்! தந்தை, அம்மாவிடம் நாம் வாங்கிக்கேட்டு கிடைக்காத பொருள்கள் கூட தாத்தா, ஆச்சியிடம் இருந்து கிடைத்துவிடும். தாத்தாவும், ஆச்சியும் ‘பேரப்பிள்ளே’ என கூப்பிடும் அழகே தனிதான்!

இன்றெல்லாம் பலருக்கும் தாத்தா, ஆச்சியின் அருமையும், அவர்களோடு இருக்கும் சந்தோசமான தருணமும் தெரிவதே இல்லை. உண்மையில் அவர்கள் பக்கத்தில் இருக்கும் நாள்களை சொர்க்கம் என்றே சொல்லிவிடலாம். 58 வயது வரை உழைத்து, உழைத்து ஓடி உருக்குலைந்த வயோதிகர்களுக்கு பேரக்குழந்தைகளைப் பார்த்ததும் சந்தோசம் தாங்காது.
அந்தவகையில் இங்கேயும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு பேரனை, தாத்தா தூக்கி தன் மடியில் வைத்திருக்கிறார். அந்த பேரனோ, தன் தாத்தாவின் முகத்தைப் பார்த்து குலுங்கி, குலுங்கி சிரிக்கிறது.

தாத்தாவுக்கோ அதைப் பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் முகத்தில் ஆனந்தம் விளையாடுகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.