இனி செவ்வாழை வாங்கும்போது உஷாராக இருங்கள்….

உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது ஒரு பெரிய குற்றம் பார்க்கப்படும் நிலையில். அதிலும் முக்கியமாக சிறியவர் முதல், பெரியவர்கள் வரை பயன்படுத்தம் பால், பழம் போன்ற பொருட்களில் செய்யக்கூடிய கலப்படம் என்பது மன்னிக்க முடியாத குற்றம்தான். அப்படியாக ஒரு கலப்படம் தொடர்பான வீடியோ இப்போது வைரலாக சுற்றி வந்துகொண்டிருக்கிறது. உணவுப் பொருட்களில் எத்தனையோ வகையான கலப்படங்களை நாம் இதற்கு முன்பாக பார்த்திருக்கின்றோம். ஆனால் இது மிக மிக நூதனமாக உள்ளது, இப்படியும் கூட நடக்க முடியுமா என்று அதிர்ச்சியாகவும் உள்ளது. என்ன கலப்படம் என்கிறீர்களா? சாதாரண நாட்டு வாழைப்பழத்தை கலர் பூசி, செவ்வாழை பழம் என்று விற்பனை செய்து வருகிறது ஒரு கும்பல்.


ஆகவே வீடியோ வைரலாக வேண்டும் என்று நோக்கத்திற்காகவும் இவ்வாறு செய்திருக்கலாம் என்ற கருத்தும் வருகிறது. எது எப்படி இருந்தாலும் உண்மையில் இது போல செவ்வாழைக்கு வண்ணம் பூசி ஏமாற்றும் கும்பல் இருந்தால், அரசு தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக இருக்க வேண்டும்.