எஞ்சாமி என்ஜாய் பாடலை அழகாக பாடிய குழந்தை

எஞ்சாமி என்ஜாய் பாடலை அழகாக பாடிய குழந்தையின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் ஆதரவைப் பெற்று வைரலாகி வருகிறது.

சின்னச்சிறு குழந்தைகள் எதை செய்தாலும் அழகாகத்தான் இருக்கும் . வீட்டில் குழந்தைகள் இருந்தால் நேரம் எப்படி போகிறது என்றே தெரியாது. அதிலும் இந்த கொரோனா காலத்தில் வீட்டில் குழந்தைகள் இருந்தவர்களுக்கு இது கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

குழந்தையும் தெய்வமும் ஓன்று என்பார்கள் . குழந்தைகளின் உலகம் எப்போதுமே சந்தோஷமானதாகவே இருக்கும். அதனால் தான் ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள்.அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள்.

அந்தவகையில் அந்த குழந்தை பாடிய என்ஜாய் பாடல் இணையத்தில் இணையவாசிகளின் ஆதரவால் வைரலாகி வருகிறது. பலரும் அந்த குழந்தையின் பாடல் திறமையை பாராட்டி பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த குழந்தையின் திறமையை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இங்கே