குழந்தையுடன் வயதான குழந்தை நடை பயிலும் அழகிய காட்சி …பாருங்க உருகிடுவீங்க…!

பிள்ளைகள் எதை செய்தாலும் அது பார்ப்பவர்களை ரொம்பவே ரசிக்க வைத்துவிடும். எந்த விதமான கள்ள கபடமும் இல்லாமல் அவர்கள் செயல்படுவது அனைவருக்கும் பிடித்த விஷயம்.

அதிலும் வயதான தாத்தா, பாட்டிகளோடு இருக்கும் பேரன், பேத்தி-களுக்கு ரொம்பவே சந்தோசமாக பொழுது கழியும். இங்கேயும் அப்படித்தான். ஒரு வயதான தாத்தா தன் பேரக் பிள்ளையோடு அதிக நேரத்தை செலவிட்டு வந்தார்.
அவர் வயோதிகத்தின் காரணமாக இரும்பு கம்பி போட்ட வாக்கிங் ஸ்டிக் உதவியோடு நடக்கிறார். அந்த ஸ்டிக்கிற்கு உள்ளே நின்றவாறு பேரக் பிள்ளையும் நடை பயில்கிறது.
ஆங்கிலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் முதுமை பருவத்தை இரண்டாம் பிள்ளை பருவம் என சொல்வார். அதை மெய்ப்பிக்கும்வகையில் தாத்தாவும், பேரக் பிள்ளையும் சேர்ந்து நடந்து செல்வது…அதுவும் தத்தி, தத்தி நடை பழகுவது போல் நடந்து செல்வது பார்க்கவே ரொம்பவும் உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. நீங்களே பாருங்கள்…