குழந்தையை போல் மனைவியை பார்த்துக்கொள்ளும் கணவன்

குழந்தையை போல் மனைவியை பார்த்துக்கொள்ளும் கணவனை பார்த்து இவர்கள் பாசத்துக்கு ஈடு இணையே இல்லை என்று இணையவாசிகள் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.

தன்னுடைய ஆசை மனைவியை மடியில் சாய்த்துக் கொண்டு கணவன் பஸ் தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சுமார் 40 வயது மதிக்கதக்க நபரொருவர் தன்னுடைய மனைவியை மடியில் சுமந்தவாறு பஸ் தரிப்பிடத்திலுள்ள ஒரு உணவகம் ஒன்றிற்கு முன்னாள் அமர்ந்திருக்கிறார்.
மனைவி தன்னுடைய மடியில் அயர்ந்து உறங்க, தொந்தரவு ஏதும் ஏற்படாத வண்ணம் கவனமாக பார்த்துக் கொள்கிறார் கணவன். இதனை வீடியோவாக பதிவு செய்த நபர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட டிரெண்டாகி வருகிறது.
பலரும் இவர்களை காதலை போற்றி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர், காதல் இன்னும் உயிர்ப்புடன் உள்ளதையே இது காட்டுகிறது, அன்பிற்கு ஈடுஇணையில்லை, இதுதான் உண்மையான காதல் என பல கமெண்டுகள் பதிவாக வைரலாகி வருகிறது.