கொட்டும் மழையில் இருந்து தனது பிள்ளைகளை காப்பாற்ற போராடும் அம்மா பறவை

கொட்டும் மழையில் இருந்து தனது பிள்ளைகளை பாதுகாக்கும் அம்மா பறவை ஒன்றின் காணொளி இணையத்தி வைரலாகிவருகிறது.

இந்த உலகத்தில் அன்பு என்பது மனிதர்களுக்கும் மட்டுமானது இல்லை என்பதை நிரூபித்துள்ளது இந்த காணொளி காட்சி. இந்திய வனத்துறை நிர்வாகிகளில் ஒருவரான சுதா ராமன் அவர்கள் பகிர்ந்துள்ள காணொளி ஒன்றில், கொட்டும் மழையில் இருந்து அம்மா பறவை ஒன்று தனது பிள்ளைகளை பாதுகாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

30 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த காணொளி காட்சியில், அம்மா பறவை ஒன்று கொட்டும் மழையில் இருந்து தனது பிள்ளைகளை காப்பாற்ற போராடுகிறது. இந்த காணொளிவை பார்க்கும்போது, பறவையாக இருந்தாலும் அதுவும் ஒரு அம்மா என்பதை இந்த காட்சி நமக்கு உணர்த்துகிறது. அந்த காட்சியை நீங்களே பாருங்கள்.