கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிகர் கவுண்டமணி அந்த ஒன்றை மட்டும் செய்யமாட்டாராம்!! ஏன் தெரியுமா ? வெளிவந்த தகவல்!!

தமிழ் திரையுலகில் சீசனுக்கு சீசன் எத்தனையோ சிரிப்பு ஹீரோகள் வலம்வந்து கொண்டு இருந்தாலும் இவர்களில் ஒரு சிலர் மட்டுமே மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றனர். இந்த வரிசையில் அப்போது நாகேஷ் தொடங்கி இப்போது இருக்கும் யோகி பாபு வரை தனக்கென ஒரு பாணியில் கலக்கியவர்கள் தான். ஆனால் கவுண்டர் கொடுத்து கலாய்ப்பது என்று சொன்னால் நம் சிரிப்பு கதாநாயகன் கவுண்டமணி தான் பலருக்கும் நினைவு வரும்.

தன்னுடைய நக்கல், நையாண்டி மூலம் சுவாரஸ்யமான சிரிப்பு காட்சிகளில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்.அதுமட்டுமில்லாமல் அவர் நடித்த காலகட்டங்களில் ஹீரோவை விட அதிகமாக சொகுசாக வாழ்ந்தவர் எனவும் ஒரு வரலாறு உண்டு. தயாரிப்பாளர்கள் கவுண்டமணியை மட்டும் தனியாக கவனிப்பார்களாம்.

அதுமட்டுமில்லாமல் கவுண்டமணி, செந்தில் கூட்டணி இல்லாமல் தனியாகவே ஒரு திரைப்படத்தை தாங்கும் அளவுக்கு வல்லமை கொண்டவர். தனி ஒரு சிரிப்புயனாக கலக்குவதிலும் அவருக்கு நிகர் அவர்தான். ஆனால் செந்திலிடம் அது மிஸ்ஸிங்.

ஒரு மொழியில் பிரபலம் ஆகிவிட்டாலே அவர்களுக்கு பல மொழிகளிலிருந்து திரைப்பட வாய்ப்பு வரும் என்பது தெரிந்த ஒன்றுதான். இன்று இருக்கும் பல ஹீரோகளும் தங்களுடைய திரைப்படங்கள் மற்ற மொழிகளிலும் ஓடவேண்டும், பெரிய அளவு வசூல் செய்ய வேண்டும் என விரும்புகின்றனர்.

ஆனால் கவுண்டமணி நடித்தால் தமிழ் திரையுலகில் மட்டும்தான் நடிப்பேன் என அடம் பிடித்தாராம். கவுண்டமணி உச்சத்தில் இருந்த காலகட்டங்களில் அவரை தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடிக்க வைக்க கோடிகளில் பணத்தை கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்கள் ரெடியாக இருந்தார்களாம்.ஆனால் எனக்கு பாஷை தெரியாத மொழியில் நடிக்க விருப்பமில்லை என ஓபன் ஆக சொல்லிவிட்டாராம் கவுண்டமணி. எவ்வளவு கோடி கொடுத்தாலும் இதுதான் என்னுடைய பதில் என்று கூறி அந்தத் தயாரிப்பாளர்களை திருப்பி அனுப்பி விட்டதாகவும் செய்திகள் உள்ளன.