ஜல்லிக்கட்டு காளைக்கு பயப்படாமல் இந்த பிஞ்சு குழந்தை செய்த செயலைப் பாருங்க

ஜல்லிக்கட்டு காளைக்கு பயப்படாமல் இந்த பிஞ்சு குழந்தை செய்த செயலைப் பாருங்க இணையத்தில் செம வைரலாகி வருகிறது .

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. பிள்ளைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் பிள்ளைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.
பிள்ளைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு பிள்ளையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு பிள்ளைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் பிள்ளைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

இங்கே ஒரு பிள்ளை செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அந்தக் பிள்ளை அப்படி என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா? பொதுவாகவே இளங்கன்று பயம் அறியாது என சொல்வார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு வயதுகூட நிரம்பாத குட்டிக்பிள்ளை ஒன்று மிகவும் தைரியமாக காளையோடு விளையாடுகிறது. இன்னொரு குட்டிப்பாப்பா மிகவும் சமத்தாக வீட்டை தூப்பது, துடைப்பது என செய்து அசத்துகிறது. இதேபோல் குட்டிக்பிள்ளைகளின் க்யூட் ரியாக்சன்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக..