தாயை இழந்த குரங்கு குட்டிக்கு அம்மாவாக மாறிய நாய்

தாயை இழந்த குரங்கு குட்டிக்கு அம்மாவாக மாறிய நாய் ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அன்பு என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. எல்லா உயிரினங்களும் தனது குட்டி அல்லது குஞ்சு மீது அதிக பாசம் கொண்டிருக்கும். மனிதர்களும் அதேபோல்தான் தனது குழந்தைகள் மீது வைத்திருப்போம். ஆனால் இங்கோ ஒரு குட்டி குரங்கின் மீது நாய் ஒன்று பாசம் வைத்து அதனை முதுகில் சுமந்து கொண்டு செல்கிறது. அந்த குரங்கு குட்டியை தனது குட்டியாக கருதி அம்மாவாகவே மாறி அந்த குட்டியை பார்த்துக் கொள்கிறது.

அந்த குரங்கு குட்டிக்கு அம்மாவாகிய அந்த நாயை இணையவாசிகள் பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அன்புக்கு மொழி கிடையாது அது அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடியது என்று நிரூபணமாகியுள்ளது. இது குறித்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.