நடராஜனால் மிகப்பெரிய அளவில் மேம்பட முடியும் : கேப்டன் கோலி பாராட்டு

ஆஸ்திரேலியா-வுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியின் வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி பேசியதாவது:
”ரவீந்தர் ஜடேஜாவுக்கு தலையில் அடிபட்டதால் சாஹல் களம் இறங்கி சிறப்பாக பந்து வீசினார். ஆடுகள நிலவரம் அவருக்கு ஏற்றபடி சாதகமாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது அதை பார்க்கும் தோற்கடித்து விடுவார்கள் என்று நினைத்தோம்.
டி20 என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் . நாங்கள் போதுமான அளவிற்கு நெருக்கடி கொடுத்தோம். டி20 யில் கொஞ்சம் அதிஷ்டமும் தேவை . நடராஜனை பார்த்தால், அவரால் மிகப்பெரிய அளவில் மேம்பட முடியும் போல் தோன்றுகிறார். ஹர்திக் பாண்ட்யா கேட்ச் திருப்புமுனையாக அமைந்தது” என தெரிவித்துள்ளார்.