நிலவில் எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பியது சீன விண்கலம்

நிலவில் இருந்து பாறைகளுடன், மண் உள்ளிட்ட மாதிரிகளை புவிக்கு கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்காக சீனா ‘சேஞ்ச்5’ என்ற விண்கலத்தை போன மாதம் 24-ம்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்த விண்கலம் போன 1-ம்தேதி நிலவை சென்றடைந்தது. பின்னர் விண்கலத்தில் இருந்து லேண்டர்அசென்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கு பாறைதுகள்கள், மண் மாதிரிகளை சேகரித்த லேண்டர்அசென்டர் நிலவு பரப்பிலிருந்து போன 3-ம்தேதி புறப்பட்டு, நிலவைச் சுற்றிக்கொண்டிருந்த ‘சேஞ்ச்5’ விண்கலத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

இந்நிலையில் நிலவை சுற்றி வந்து கொண்டிருந்த ‘சேஞ்ச்5’ விண்கலம் புவியை நோக்கி புறப்பட்டுள்ளதாக சீன தேசிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “நிலவைச் சுற்றி வந்துகொண்டிருந்த சேஞ்ச்5 விண்கலத்தின் பாதை புவியை நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பப்பட்டது.

அந்த விண்கலத்திலிருந்த 4 என்ஜின்கள் 22 நிமிடங்களுக்கு இயக்கப்பட்டதில், அதன் சுற்றுவட்டப் பாதை புவியை நோக்கித் திரும்பியது. இந்த விண்கலம் வியாழக்கிழமை அதிகாலை வேளையில் புவிக்கு திரும்பியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலவிலிருந்து மாதிரிகளை எடுத்து வந்த 3-வது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய 2 நாடுகள் நிலவின் மாதிரிகளை சேகரித்து வந்து ஆராய்ச்சி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்