வித்தியாசமான முரையில் திருமண பேனர் அடித்து பெண் தேடிய இளைஞர்கள்
வித்தியாசமான முரையில் திருமண பேனர் அடித்து பெண் தேடிய இளைஞர்கள் குறித்த தகவல் இணையாயத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

காரைக்காலில் நடந்த திருமண விழாவில் தினசரி நாளிதழ் வடிவில் பேனர்களை ஏந்தியபடி இளைஞர்கள் கவனத்தை ஈர்க்கின்றனர். இந்த பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காரைக்கால் வாலச்சந்தி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடந்தது. இந்தப் பகுதியைச் சேர்ந்த அருண்பிரசாத் (மணமகன்), மதுனிகா (மணமகள்) இருவரும் ஒரு வருடமாக டேட்டிங் செய்து, சமீபத்தில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இன்றைய திருமண விழாவில் நண்பர்கள் தினப்பத்திரிகை வடிவிலான வரவேற்பு பதாகையை ஏந்தியிருந்தனர். அதுதான் பலரது கவனத்தையும் ஈர்க்கிறது.
அதில், “காதலுக்கு ஆயுள் தண்டனை,” `கறிவேப்பிலை கிடைக்காததால் ஏற்பட்ட தகராறு,” “நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை” உள்ளிட்ட ஏராளமான பதிவுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் “மணப்பெண் தேவை” என கூறி நான்கு 2K கிட்ஸ் இளைஞர்கள் தங்களது புகைப்படம், வயது, படிப்பு, பதிவிட்டு “ஊதியம்: தேவையான அளவு. அடுத்த மாப்பிள்ளை நாங்க, பொண்ணு இருந்தா தாங்க! குறிப்பு பொண்ணா இருந்தா மட்டும் போதும்” என்று பதிவிட்டுள்ளனர்.

இந்த போஸ்டர் சிரிப்பலையை ஏற்படுத்தியது. திருமண மண்டப வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனரை வாகன ஓட்டிகள் பார்த்து ரசித்தனர்.