வெறும் இரண்டு குச்சிகளை வைத்து தாளம் போட்டு அசத்திய சிறுவன்

வெறும் இரண்டு குச்சிகளை வைத்து தாளம் போட்டு அசத்திய சிறுவன் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

திறன் என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறன் இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய சிறுவனின் திறன் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.
அப்படி அந்த குழந்தை என்ன செய்தான் எனக் கேட்கிறீர்களா? இரண்டே இரண்டு குச்சிகளை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு மிக அருமையாக தாளம் போடுகிறார். அதுவும் மிக, மிக ரசிக்கும்படி உள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே வராத அளவுக்கு இந்த குழந்தை மிக நேர்த்தியாக தாளம் போடுகிறார்.
இந்த வீடீயோவைப் பார்த்து நெட்டிசன்கள் சொக்கிப் போயுள்ளனர். இதுவரை 80 லட்சம் பேர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.