ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் தோனிக்கு தடை? ; நடுவர்களுடன் நடந்த விவாதத்துக்கு தண்டனை

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் தோனிக்கு தடை? ; நடுவர்களுடன் நடந்த விவாதத்துக்கு தண்டனை

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் தோனிக்கு தடை? ; நடுவர்களுடன் நடந்த விவாதத்துக்கு தண்டனை என்ற செய்தி இணையத்தில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இறுதிப் போட்டியில் விளையாட  சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு தடை விதிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஒருமுறை மெதுவாக பந்து வீசியதற்கு நடத்தை நெறிமுறைக்காக அபராதம் தோனிக்கு விதிக்கப்பட்டது. இப்போது மே 28 அன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.  சென்னை அணி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸை 15 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மைதானமான MA சிதம்பரம் ஸ்டேடியத்தில் வீழ்த்தி சாதனை படைத்து 10வது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.  GT vs CSK குவாலிஃபையர் 1 மோதலின் போது, ​​தோனி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் போட்டியில் நான்கு நிமிட தாமதம் ஏற்பட்டது.  

மதீஷா பத்திரனா டைட்டன்ஸ் அணியின் சேசிங் போது சிறிது நேரம் ஓய்வு எடுக்க சென்றார்.  ஐபிஎல் நிபந்தனைகளின்படி, எட்டு நிமிடங்களுக்கு மேல் மைதானத்தை விட்டு வெளியேறும் எந்த வீரரும், மீண்டும் திரும்பிய பிறகு, அவர் பந்து வீச அனுமதிக்கப்படும் முன்பு அதே அளவு நேரம் மைதானத்தில் இருக்க வேண்டும். ஆனால் பத்திரனா மைதானத்திற்கு திரும்பியதும் பந்து வீச தயாரானார். குஜராத் டைட்டன்ஸ் 30 பந்துகளில் வெற்றி பெற 71 ரன்கள் தேவை என்ற நிலையில், 6 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது.  

dho_2-1251267

ஓவருக்கு முன்பாக நடுவர் அனில் சௌத்ரி பத்திரனாவுடன் உரையாடுவதை தோனி கவனித்தார். பத்திரனா ஒன்பது நிமிடங்களுக்கு மேல் வெளியேறியதாகவும், அவர் பந்துவீச முடியுமா இல்லையா என்பது பற்றிய விவாதம் களத்தில் இருந்தது.  பத்திரன பந்துவீசுவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்க வேண்டும் என்று அம்பயர்களால் தோனிக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் கடைசி ஓவர் தொடங்கவில்லை என்றால், ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக அபராதம் மற்றும் வட்டத்திற்கு வெளியே நான்கு பேரை மட்டுமே நிறுத்த வேண்டும். இந்த காரசார விவாதங்கள் நடந்து முடிய எட்டு நிமிடங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டது, பின்பு பத்திரன பந்து வீச அனுமதிக்கப்பட்டார்.  அம்பயர்கள் தோனி மீது குற்றம் சாட்டினால் அவர் பைனல் போட்டியில் விளையாடாமல் போவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.

இதையும் பாருங்க:  கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே திடீர் மரணம்! கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி... அவருக்கு வயது 52!
image-2973405

இதற்கிடையில், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2023 குவாலிஃபையர் 2ல் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் மோத உள்ளது, புதன்கிழமை நடந்த எலிமினேட்டர் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை வீழ்த்தியது. மார்கஸ் ஸ்டோனிஸ் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, நவீன்-உல்-ஹக்கின் வேகத்தில் சிக்கி 4 விக்கெட்டுகளை அவரிடம் பறி கொடுத்தது.  மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 182/8 ரன்களை எட்டியது. கேமரூன் கிரீன் 41 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் எடுத்தனர், இருப்பினும், மும்பை அணி சார்பில் ஆகாஷ் மத்வால் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களை கைப்பற்றினார்.  

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்