தனது குட்டியைப் போல் சிறுவன்மீது பாசம்வைத்த மாடு.. பாடாய்படுத்தும் சிறுவன்.. மாட்டோட ரியாக்சனைப் பாருங்களேன்..!

மாடுகளை வீட்டின் புறவாசலில் கட்டி வைக்கும் விவசாயி-கள் பலரை-யும் பார்த்திருப்போம். ‘’ஆடு, மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேசன்கார்டில் பேரை சேர்க்க கேட்கும்” என சிவாஜி திரைப்பட-த்தின் பல்லேலக்கா பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடும் பாடலைப் போலவே நிஜத்தில் ஒரு குடும்பம் இருக்கிறது என்றால் ஆச்சர்யம் தானே?

ஆம்..தன் வீட்டு செல்ல நாய்க்குட்டியோடு நெருக்கமாக இருக்கும் பிள்ளைகளைப் போல மூன்றுவயதுகூட நிரம்பாத சிறுவன் ஒருவன் வீட்டு புழக்கடையில் இருக்கும் தன் வீட்டு மாட்டோடு நெருக்கமாக இருக்கும் வீடியோ, அதிலும் அந்த மாட்டை போட்டு இம்சித்து..அன்பால் ஆட்டுவிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

குறித்த அந்தக் காட்சியில் ஒரு சிறுவன் தன் வீட்டு பின்னால் நிற்கும் தான் வளர்க்கும் மாட்டோடு ரொம்பவும் நெருக்கமாக இருக்கிறான். அதிலும் அந்த மாட்டை தலையைப் பிடித்து ஆட்டுவது தொடங்கி, அதன் மேல் படுத்து உறங்குவது வரை பொடியன் அசால்டாக டீல் செய்கிறான். அதைப் பார்த்தால் நம்மையும் அறியாமல் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போகிறோம். மாடு, ஏதோ கன்றுகுட்டியோடு இருப்பது போல் அந்த சிறுவன் செய்வதற்கு எல்லாம் ஒத்துழைப்பு செய்து இருக்கிறது.

பாசம் மனிதர்-களுக்கு மட்டுமானது அல்ல. ஐந்தறிவு மட்டுமே படைத்த மிருகங்-களுக்கும் அது உண்டு என்பதை மெய்ப்பிப்பதுபோல் இந்த வீடியோ உள்ளது. இதோ நீங்களே பாருங்களேன்.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்