திருட வந்தவனுக்கு பாட்டி கொடுத்த வைத்தியம்

திருட வந்தவனுக்கு பாட்டி கொடுத்த வைத்தியம்

நாம் எதிர்பாரத நேரத்தில் நம்மையும் அறியா மல் நடப்பது தான் திருட்டு. அப்படியான சந்தர்ப்பங்களில் நம்மால் ஒண்டும் செய்ய முடியாது. ஒரு பொருள் தொலைந்து விட்டால் அதை பற்றி கவலை அடைய மட்டுமே நம்மால் முடியும்.

அல்லது அந்த பொருள் தொலைந்து போகாத வண்ணம் அல்லது திருடர்களிடம் பாதுகாப்பது மட்டுமே சிறந்த வழியாகவும் இருக்கும் , இப்போதைய காலங்களில் இந்த மாதிரி திருட்டு அதிகமாகி விட்டது. நடை பாதைகளிலும் பயணங்களிலும் இவ்வாறான திருட்டுக்கள் நாளுக்கு நாள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன.

அதுபோல் ஒரு நிகழ்வு தான் இங்கும் நடைபெற்றுள்ளது , வயதான ஒரு பாட்டி ஒருவர் தன்னுடைய வீட்டின் முன்னே அமர்ந்து இருந்து கைபேசி பார்த்து கொண்டு இருக்கின்றார். அந்த நேரத்தில் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களில் ஒருவர் மெதுவாக இந்த பெண்மணியை நோக்கி வருகிறார்.

வேகமாக அந்த பெண்ணிடம் இருந்து கைபேசி ஐ பறிக்க மூற்படும் போது தன்னை சுதாகரித்துக்கொண்ட அந்த வயதான பெண் சரமாரியாக அந்த இளைஞனுக்கு தக்க பாடம் கற்று கொடுக்கிறார். இந்த காட்சிகள் யாவும் அங்கிருந்த cctv கமெராவில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு துணிச்சலும் வீரமாக செயற்பட்ட குறித்த பெண்மணிக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். தற்பொழுது இதன் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க:  அமேசானில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்க திட்டமா? - இதனை தெரிந்து கொள்ளுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்