Posted in

புலிகளிடம் சிக்கிய குட்டி குரங்கை துரிதமாக செயல்பட்டு காப்பாத்திய குரங்கு

புலிகளிடம் சிக்கிய குட்டி குரங்கை துரிதமாக செயல்பட்டு காப்பாத்திய குரங்கின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

குட்டி குரங்கை தின்பதற்கு கூட்டமாக காத்து நிற்கும் புலிகளிடத்தில் இருந்து காப்பாற்றும் மற்றொரு குரங்கின் சாதுரியமான செயல்… குரங்குகள் செய்யும் செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அந்த அளவிற்கு அதன் செயல்கள் நம்மை கவரும். மனிதர்களை போன்றே குரங்குகளும் தன் குட்டிகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்.

மனிதர்களை போன்றே உணவுகளை உண்ணும். குரங்குள் சிரிப்பதை பார்ப்பதற்கு வித்தியாசமாக அழகாக இருக்கும். அவைகள் சிரிப்பதை பார்க்கும் நமக்கும் தானாகவே சிரிப்பு வரும். நாம் காண இருக்கும் வீடியோவில் ஒரு குட்டி குரங்கு ஆபத்தான முறையில் பசிக்காக ஏங்கி நிற்கும் புலிகளிடத்தில் மாட்டிக் கொண்டது. கொஞ்சம் தவறினால் கூட புலிக்கு இரையாக நேரிடும்.

ஒரு புலியானது மேல தொங்கி கொண்டிருக்கும் அந்த குட்டி குரங்கை பிடிப்பதற்காக எகிறுகிறது. தக்க சமயத்தில் மற்றொரு குரங்கானது அந்த குட்டி குரங்கை ஆபத்திலிருந்து பத்திரமாக மீட்கும் காட்சி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading